நாமிங்கு நலம்பெற வாழ்ந்திடல் வேண்டும்
நன்மைகள் பற்பல செய்திடல் வேண்டும்
கற்பவை கசடற கற்றிடல் வேண்டும்
ஈன்றவர் சொற்படி நடந்திடல் வேண்டும்
அனைவருக்கும் நன்மைகள் செய்திடல் வேண்டும்
இருப்பதை இல்லார்க்கு பகிர்ந்திடல் வேண்டும்
அன்புடன் பண்புடன் பழகிடல் வேண்டும்
உலகத்தை சுற்றி பார்த்திடல் வேண்டும்
முன்னேற்றம் எதுவென அறிந்திடல் வேண்டும்
அறிந்ததை அனைவருக்கும் உணர்த்திடல் வேண்டும்
சுற்றமும் சூழமும் சேர்ந்திடல் வேண்டும்
சேர்ந்தவர் அனைவரும் மகிழ்ந்திடல் வேண்டும்
அயராது உழைத்து வாழ்த்திடல் வேண்டும்
நல்லவர் போற்ற நடந்திடல் வேண்டும்
இறைவனை நம்பி வணங்குதல் வேண்டும்
தோல்வியை கண்டு தளராமை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
இல்லாமை இல்லாத நன்நிலை வேண்டும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடல் வேண்டும்
பஞ்சமும் ஏழ்மையும் ஓழிந்திடல் வேண்டும்
ஆசைகள் அளவுடன் இருந்திடல் வேண்டும்
பேராசை எல்லாம் அழிந்திடல் வேண்டும்
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வேண்டும்
தாய்மொழி பேசி மகிழ்ந்திடல் வேண்டும்
பற்பல மொழிகளும் கற்றிடல் வேண்டும்
கணணிக் கல்வி அறிந்திடல் வேண்டும்
அகில்த்து புதினங்கள் பார்த்திடல் வேண்டும்
நாட்டினை காக்க உதவிடல் வேண்டும்
வேண்டும் வேண்டும் எல்லாம் வேண்டும்
நல்லவை எல்லாம் எமக்கிங்கு வேண்டும்
வேண்டும் வேண்டும் இவையெல்லாம் வேண்டும்
பிரபலமான இடுகைகள்
-
ஊழல் / லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்...
-
தாஜ்மஹால், வெள்ளைப் பளிங்குகளால் மூடி மறைக்கப்பட்ட கருப்புச்சரித்திரம். இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர...
-
India is a democratic country in the world, a matter every Indian proud. Today's generation, saying that whenever the likelihood of Inde...
-
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான். தமிழின் சிறப்பு ...
-
பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அ...
-
காக்கி கலர் கால் சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் ,, அந்த பொட்டல் புழுதியில் என்னோடு சேர்ந்து அழுக்காகும் ...... நான் கபடி விளையாடும் போது....
-
`ராமன் காடு செல்ல வேண்டும்' என்று கைகேயி கேட்டுப் பெற்ற வரத்தால், ராமன் எள்ளளவும் சினம் கொள்ளவில்லை ஆனால், அவன் உடம்புக்கு வெளியே நிற்க...
-
வாழ்த்துவதும் தான் வாழ" என்றொரு வாக்கு உண்டு. இறைவனையும் சரி, இன்ன பிறரையும் சரி, நாம் வரிந்து கொண்டு வாழ்த்துவது நாம் நன்றாக வாழ வேண்ட...
-
காதலர்தின வாழ்த்து கவிதை வாள்த்துமடல்களில்லை, வந்து குவியும் பரிசுகளில்லை, நான் அங்கும் ,நீ இங்கும் இல்லை , எல்லா விடுமுறை நாட்களின் மதியப்...
-
ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா! ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக