தற்போதுள்ள எம்.பி.,க்களில் 150 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்த தேர்தலில் ஓட்டளிக்கும்போது, இது போன்ற உதவாக்கரை நபர்களை மீண்டும் எம்.பி.,க்களாக மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது,'' என, காந்தியவாதி அன்னா ஹசாரே பேசினார். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும், அன்னா ஹசாரேயின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதிக்கு பின், அவர் மேடையில் பேசவில்லை. நேற்று, அவர் மேடையில் பேசுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும், நேற்று காலை 10 மணிக்கு, அன்னா ஹசாரே மேடைக்கு வந்தார். அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள், "பாரத் மாதா கி ஜே' என, குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, அன்னா ஹசாரே பேசியதாவது: என்னுடைய சுயநலனுக்காக இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, உண்ணாவிரதம் இருக்கிறேன். பலமான லோக்பால் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறும் வரை, என் போராட்டம் தொடரும். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை, என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த போராட்டத்துக்கு மக்கள் தரும் ஆதரவு, எனக்கு பெரும் சக்தியை அளித்துள்ளது. கடைசி மூச்சு உள்ளவரை போராட்டம் நடத்துவேன். நான் சாதாரணமான நபர். எனக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு, ஆச்சர்யம் அளிக்கிறது. மக்களுக்காக பணியாற்றும்படி, கடவுள் தான் என்னை தேர்வு செய்துள்ளார். தற்போதுள்ள எம்.பி.,க்களில் 150 பேர் மீது, குற்ற வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட உதவாக்கரை எம்.பி.,க்களை, அடுத்த தேர்தலில், மக்கள் தேர்வு செய்யக்கூடாது. எம்.பி.,க்களிடம் மக்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. அதை அவர்கள் நிறைவேற்றுவது இல்லை. நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்வு செய்யாதீர்கள் என, மக்களிடம் பிரசாரம் செய்யப் போகிறேன். மக்கள் சக்தி, எம்.பி.,க்களின் சக்தியை விட அதிகம். மக்களுக்கு சேவை செய்பவர்கள், ஒழுங்காக சேவை செய்யாவிட்டால், மக்கள் அவர்களை தூக்கியெறிந்து விடுவர். இவ்வாறு ஹசாரே பேசினார்
பிரபலமான இடுகைகள்
-
ஊழல் / லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்...
-
தாஜ்மஹால், வெள்ளைப் பளிங்குகளால் மூடி மறைக்கப்பட்ட கருப்புச்சரித்திரம். இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர...
-
India is a democratic country in the world, a matter every Indian proud. Today's generation, saying that whenever the likelihood of Inde...
-
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான். தமிழின் சிறப்பு ...
-
பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அ...
-
காக்கி கலர் கால் சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் ,, அந்த பொட்டல் புழுதியில் என்னோடு சேர்ந்து அழுக்காகும் ...... நான் கபடி விளையாடும் போது....
-
`ராமன் காடு செல்ல வேண்டும்' என்று கைகேயி கேட்டுப் பெற்ற வரத்தால், ராமன் எள்ளளவும் சினம் கொள்ளவில்லை ஆனால், அவன் உடம்புக்கு வெளியே நிற்க...
-
வாழ்த்துவதும் தான் வாழ" என்றொரு வாக்கு உண்டு. இறைவனையும் சரி, இன்ன பிறரையும் சரி, நாம் வரிந்து கொண்டு வாழ்த்துவது நாம் நன்றாக வாழ வேண்ட...
-
காதலர்தின வாழ்த்து கவிதை வாள்த்துமடல்களில்லை, வந்து குவியும் பரிசுகளில்லை, நான் அங்கும் ,நீ இங்கும் இல்லை , எல்லா விடுமுறை நாட்களின் மதியப்...
-
ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா! ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக