பிரபலமான இடுகைகள்

திங்கள், 29 டிசம்பர், 2014

பெருங்குடி
எங்கள் கிராமம்


முட்டிக்கால் சேற்றில்
கொறவை மீன் பிடித்த
பெரியவாய்க்கால்
தூர்ந்து போய் வெகுநாளாயிற்று....

தார்சாலைகளில்
வெது வெதுப்பாய்
மாட்டுசானம் பாத்து
பலவருடமாயிற்று....

வீட்டுக்கு வெள்ளையடிப்பது
அவுட்டாப் பேஷனாகிவிட்டது...

ஒரு வார
பொங்கல் பண்டிகை உற்சாகத்தை
தொலைகாட்சிகாரனுங்க
களவாடி கொண்டுவிட்டார்கள்...

சாலைகளில்
பளிர் கலர்களில் உடை அணிந்த
தாவாணி பெண்கள்
காணாமலே போய்விட்டனர்...

சிறுவர்களின்
கில்லி ஆட்டம்,
பாண்டி ஆட்டம்,
ஐஸ்பாரி, போன்றவை
தற்கொலைசெய்து கொண்டு விட்டன....

கல் அடுப்பு கட்டி
விறகுபுகை கண்கலங்க வைத்து,
மண்பானையில் பொங்கலிட்டது
அரிதாய் போய்.... காஸ் அடுப்பும்,
ஸ்டெய்னஸ் ஸ்டிலும்,
எங்கள் கலாச்சாரமாயிற்று...

பழனிச்சாமி பொண்ணையும்
பொண்ணுச்சாமி பையனையும்
இலகுவாய் அடையாளபடுத்திக்கொண்ட
பழக்கம் அழிந்து விட்டது...

மறைவாய் கபடி விளையாண்ட
அம்மன் கோவில் கூத்துப்பொட்டல்
கான்கிரீட் காடாய் மாறிவிட்டது...

எல்லை காவல் தெய்வம்
ஐயனாரை சுற்றி...
கிரிக்கெட்
பயிர்விளைச்சல் அமோகம்...

மஞ்சு விரட்டு நடந்த
முருகன் கோவில் மைதானத்தில்,
நான்கு பசுக்களும்,இரண்டு காளைகளும்
சாங்கியத்துக்கு பலூன்கொம்போடு நிற்க்கின்றன...

மரவள்ளி கிழங்கு,
சுருளி கிழங்கு,
சக்கரை வள்ளி கிழங்கு,
கடலை மிட்டாய் விற்ற பாட்டிகளும்...
ஆலமரத்தடியும்,
அரசமரத்தடியும்,
சடுதியில் மறைந்து விட்டன...

விரல் முனை சுண்ணாம்புக்கறை
பெரியவ்ர்கள் காணாமல் போய்,
உள்ளங்கையில் ஹான்ஸ் தேய்க்கும்
இளைஞர்கள் வந்து விட்டார்கள்....

சைடில் ரோஜா பூ வைத்து நடந்தாள்...
அவள் தேவதை என்று உருவகபடுத்தியவர்கள்...
லோ ஹீப்பையும்,லோ நெக்கையும்
ஏற்றுக்கொண்டு விட்டார்கள்...

முப்பதே குடும்பங்கள் வாழ்ந்த கிராமம்....
முன்னூறு நகர்களாய் விரிந்து கிடக்கின்றது....

எல்லாம் மாறி
மாறாமல் இன்னும்
துரு பிடித்த வண்ணம் நிற்கிக்கின்றது....
எங்களதேர்மட்டும்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக